owners whatsapp

ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தங்க.

ஒருத்தர் சொன்னாரு, ‘என்
வேலைக்காரந்தான்
உலகத்திலேயே படு முட்டாள்’ னு.

மறுத்த அடுத்தவர், ‘வாய்ப்பே இல்ல, என்
வேலைக்காரனப் பத்தி தெரியாம
சொல்றீங்க’ ன்னாரு.

சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி,
மொத ஆளு தன்னோட
வேலைக்காரனை கூப்பிட்டாரு.

பத்து பைசாவை கொடுத்து ‘கடைக்கு போய்,
நல்லா பாத்து இன்னோவா கார்
ஒன்னு வாங்கிட்டு வா’ ன்னாரு.
‘சரிங்க அய்யா’
ன்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான்.

‘பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன
வாங்க சொன்னேன்னும் தெரியாது,
பத்து பைசா செல்லுமான்னும்
தெரியாது, ஆனா சொன்ன
உடனே வாங்க கிளம்பிட்டான் பாருங்க’
ன்னாரு.

‘கொஞ்சம் பொறுங்க’
ன்னு சொல்லி அடுத்தவர் அவரோட
வேலைக்காரனை கூப்பிட்டாரு.
அவன் இன்னும் மொத ஆளவிட அதிகமான
பவ்யமா வந்தான்.
‘சொல்லுங்கைய்யா என்ன செய்யனும்’
னான்.
‘அவசரமான விஷயம், வீட்டுல போயி நான்
இருக்கிறேனான்னு பாத்துட்டு வா’
ன்னாரு.
‘உடனே பாத்துட்டு வர்றேன்’
னு அவனும் கிளம்பிட,

‘பாத்திங்களா, என் ஆள’ ன்னாரு.

 மொத
ஆளு ‘எப்பா உன் ஆளுதான் அருமை ’
னு தோல்விய ஒத்துகிட்டாரு.

அதே நேரம், வேலைக்காரங்க
ரெண்டு பேரும் வழியில சந்திச்சிட்டாங்
க.

ஏற்கனவே பாத்துகிட்டதனால, ஒருத்தன்
சிரிச்சுகிட்டே இன்னொருத்தன் கிட்ட,
‘என் மொதலாளிய மாதிரி முட்டாள்
இந்த உலகத்திலேயே இல்ல’ ன்னான்.
‘எப்படி சொல்றே’ ன்னான் அடுத்தவன்.
‘பத்து பைசாவ
கொடுத்து என்னமோ வாங்கிகிட்டு வர்ற
சொல்றானே?,
இன்னிக்கு ஞாயித்து கிழமை,
கடை இருக்குமா’ ன்னான்.

‘அட அதாவது பரவால்ல,
மறந்து போயி சொல்லியிருக்கலாம்,
ஆனா எங்க
ஆளு போயி அவரு இருக்காரான்னு வீட்டுல
போயி பாத்துட்டு வரனுமாம்.
அவருகிட்டதான் செல் போன் இருக்குல்ல,
போன் பண்ணி தெரிஞ்சுக்கலாம்ல’
ன்னான்.

No comments:

Post a Comment